*கோர்ட் உத்தரவு*

“சாதி, மதமற்றவர்” என இயக்குநர் பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக NO என்ற வடிவத்தில் கண்ணாடி அணிந்து வந்தார், இயக்குநர் பார்த்திபன்.
இவ்வழக்கில், அவருக்கு மேற்கண்ட சான்றிதழை ஒரு வாரத்தில் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

